Begin typing your search above and press return to search.
மக்களின் உயிர்காக்கும் தடுப்பூசியை பெறுவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ஆர்.பி. உதயகுமார் பேட்டி
கொரோனா தடுப்பூசி விரைந்து கிடைக்க நடவடிக்கை, முன்னாள் அமைச்சர் உதயக்குமார்.
HIGHLIGHTS
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார் மருத்துவமனை கட்டிடங்கள் மிகுந்த சேதம் அடைந்துள்ளதை கண்டு அதனை விரைந்து புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக மருத்துவரிடம் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தற்போது கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் 35 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாக குறைந்த பின்னர் தமிழக அரசின் மின்னல் வேக செயல்பாடு பலன் கிடைக்க வேண்டுமென்றால் தற்போது நிலவும் தடுப்பூசி பற்றாக் குறையை போக்கி மக்களின் உயிர்காக்கும் நடவடிக்கைக்கு தமிழக அரசு மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.