/* */

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: சாலைகளில் தேங்கிய மழைநீர்

கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் பயிர்களுக்கு தேவைப்பட்ட தண்ணீர் கிடைத்தததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: சாலைகளில் தேங்கிய மழைநீர்
X

மதுரையில, பலத்த மழையால் அண்ணாநகர் வீரவாஞ்சி தெருவில், மழைநீர் பெருக்கெடுத்தது.

மதுரை,திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மாலை பல இடங்களில் பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில், பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவியது.மாலை 6 மணி அளவில், பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், பல இடங்களில் இடி மின்னலுடன்பலத்த மழை பெய்து, சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், சமயநல்லூர், பரவை, விளாங்குடி, கருப்பாயூரணி, மேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மதுரை நகரில் அண்ணா நகர், கேகே நகர், கோரிப்பாளையம், வண்டியூர், யாகப்பா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழையால், மழைநீர் சாலையில் தேங்கின. மதுரை வீரவாஞ்சி தெருவில் மழை நீரானது, செல்ல வழி இல்லாமல் குளம் போல தேங்கின. மழை பெய்து, இரவில் சிறிய வெப்ப காற்று வீசியது .

பகல் நேரங்களில் கடினமான வெப்ப நிலவியதால், பலத்த மழை பெய்தும் கூட, வெப்பம் சற்று தான் குறைந்து இருந்தது. சோழவந்தான் பகுதிகளில், பெய்த மழையால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொடிக்கால் மற்றும் மானாவாரி பயிர்களுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் பயிர்களுக்கு தேவைப்பட்ட தண்ணீர் கிடைத்ததுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 30 Aug 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்