/* */

பெட்ரோல் குண்டு வீசியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்

HIGHLIGHTS

பெட்ரோல் குண்டு வீசியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்
X

மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த பிரேமலதாவிஜயகாந்த்

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றார் தேமுதிக நிர்வாகி பிரேமலதா விஜயகாந்த்.


சென்னையிருந்து விமானம் மூலம் மதுரை வந்த பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளகளுக்கு அளித்த பேட்டியில் மேலும் அவர் கூறியதாவது:

ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு பிஸினஸ்தான் ஆம்னி பஸ் முதலாளிகளுக்குத்தான் லாபம் கிடைக்க அரசு உதவி செய்கிறது.ஆம்னி பஸ்களுக்கு பெஸ்டிவல் டைம்லா நல்ல வருமானம்.4 ஆயிரம் டிக்கட் கொடுத்து ஊருக்குபோய்டுவந்தா ஊர்ல போய் பெஸ்டிவல் கொண்டாட என்னா இருக்கு.மற்ற நேரங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் குறைவாக இருக்கும் போது, பெஸ்டிவல் அதிக கட்டணம் வசூலிப்பது ஏன். எல்லாமே ஒரு வியாபாரமாக தான் நடைபெறுகிறது.

அரசும் வியாபார ரீதியாக செயல்படுகிறது.மக்களுக்கான அரசாக இல்லை.இது கண்டனத்திற்குரிய விஷயம்.ஆம்னி பஸ்களில் ஏன் தரம் உயர்த்துகிறீர்கள், அரசு பஸ்களை தரம் உயர்த்தினால் அனைவரும் அரசு பேருந்துகளிலே செல்வார்களே அதை ஏன் செய்யவில்லை.

அரசு பேருந்து , அரசு மருத்துவமனைக்கு மக்கள் செல்லாததற்கு காரணம் அவை தரம் இல்லாமல் போனது தான்தொடந்து, தமிழகம் முழுவதும் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்.பெட்ரோல் குண்டு வீச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையை முதல்வர் கையில் வைத்துள்ளார். குண்டு வீச்சு யாரு செய்திருந்தாலும் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முழுவதும் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்று இருக்கு மக்கள் சார்பாக ஒரு வருத்தமான விஷயம் தமிழகத்தில் தான் இருக்கிறோம் என்ற சூழ்நிலை உள்ளது.ஆர் எஸ் எஸ், விசிக பேரணி இருவருமே இருவருமே சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.சட்டத்திற்கு முன் அனைவரும் தலை வணங்க வேண்டும் கவர்மெண்ட்,சட்டம் ஒழுங்கைபாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதை நாம் வரவேற்க வேண்டும். ஓசி பேருந்து பயணம் குறித்த கேள்விக்கு:

ஒரு பெண்ணை அதிமுகவினர் வைத்து இது குறித்து விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது. மக்கள் இதை உணர வேண்டும். ஓசியில் போகிறார்கள் என கூறுகிறார்கள்.ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்க சில்லறை மாற்றுவதாக கூறுகிறார்கள். வெற்றி பெறுவதற்கு முன் ஒரு நிலைப்பாடு, வெற்றி பெற்ற பின் ஒரு நிலைப்பாடு என்ற நிலையில் உள்ளனர்.

இது அதிமுக பேசி ஏற்பாடு செய்ததாக கூறுகின்றனர்.ஓசியில் பயணம் வேண்டாம் என அந்த பெண்மணி கூறியது போல் ஒட்டுமொத்த பெண்களும் கூற வேண்டும்.ஓசி பேருந்து பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை.மக்கள் வரிப்பணத்தில் தான் அரசு பேருந்து ஓடுகிறது அமைச்சர் சொந்த பணத்திலா ஓடுகிறது.தமிழக மக்கள் அரசு பேருந்து பயணத்தை நிராகரித்து அரசுக்கு எச்சரிக்கை விட வேண்டும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என செங்கலை வைத்து உதயநிதி அரசியல் செய்தார். பாஜக தலைவர் ஜெ.பி..நட்டா,எய்ம்ஸ் குறித்து அறிவித்து அதையே செய்தார். வெறும் அறிவிப்பாகவே உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக தென்னகத்தில் பெரிய நகராக மதுரை உள்ளது. சொன்னதுபோல், விரைவாக கட்டி முடிக்க வேண்டும் என கேட்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Updated On: 2 Oct 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  4. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  5. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  6. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  9. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  10. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை