/* */

மதுரை அட்சய பாத்திரம் அமைப்பின் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி

மதுரை அட்சய பாத்திரம் அமைப்பின் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

மதுரை அட்சய பாத்திரம் அமைப்பின் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி
X

மதுரையில் அட்சய பாத்திரம் அமைப்பின் சார்பில் சாலையோர ஏழைகளுக்கு உணவினை முன்னாள் அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.

கொரோனா பரவலை தொடர்ந்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில், மதுரை மாநாகரில் சாலை ஓரங்களில் வசித்தவர்கள் பலர் உணவு இன்றி சிரமம் அடைந்தனர்.

அவர்களுக்கு, உணவு அளிக்கும் வகையில், மதுரையின்அட்சய பாத்திரம் டிரஸ்ட் தொடங்கப் பெற்று ரோட்டோரத்தில் உள்ள வறியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம், தொடங்கப் பெற்று மதுரை அரசு மருத்துவமனை, அண்ணா பேருந்து நிலையம் ,பெரியார், ஆரப்பாளையம், ரயில் நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுக்கு மதிய உணவு தினமும் வழங்கப்பட்டு வருகிறது.

நேற்றுடன் 256 நாள் நிறைவடைந்தது.பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரையின் பல்வேறு பகுதிகள் மற்றும் மதுரை அரசு பொது மருத்துவமனை தலை காயம் விபத்து பகுதியில் உள்ள பார்வையாளர்களுக்கு இன்று 600 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

விழாவை, குன்னத்தூரில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.

உணவு கொடுத்துக் கொண்டு வரும் வழியில் இரண்டு பூம் பூம் மாடுகள் தலையசைத்து வாழ்த்து தெரிவித்தது. மதுரை தெப்பக்குளம் அருகிலுள்ள பகுதியில் உள்ள உடலில் சாட்டை எடுத்து வருத்திக்கொண்டு வாழ்க்கையை ஓட்டி வரும் வறியவர்கள் மற்றும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மதுரை அரசு பொது மருத்துவமனை தலை காயம் விபத்து பகுதியில் உள்ள பார்வையாளர்கள் உட்பட 600 பேருக்கு இன்று உணவு வழங்கப்பட்டது.

இதில், மதுரை கிழக்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பிரபு கார்த்திகேயன், மதுரை ராயல் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, மதுரையின் அட்சயபாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் முழு அடைப்பு என அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை அன்றும் மதுரையில் ரோட்டோரத்தில் உள்ள வறியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பகுதியில் இருப்பவர்கள் உட்பட 800 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Updated On: 16 Jan 2022 1:22 PM GMT

Related News

Latest News

  1. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  2. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  3. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  4. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  5. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  6. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  7. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  10. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்