/* */

மதுரை அருகே கண்மாயில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மதுரை அருகே கண்மாயில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

மதுரை அருகே கண்மாயில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

இனளஞர் உயிரிழந்த ஏரி.

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பெரியசாமி. இவரது கடைசி மகன் கண்ணன் (வயது 28). இன்று காலை நண்பர்களுடன் கண்மாயில், குளிக்க சென்றிருந்தார். இந்த நிலையில், கண்ணன் நண்பர்களுடன் விளையாடி நீச்சல் அடித்துக் கொண்டு ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நீண்ட நேரம் ஆகியும் கண்ணன் வெளியில் வராததால், அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கண்ணன் தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்து மதுரை பொறுப்பு நிலைய அலுவலர் தயாளக்குமார் தலைமையிலான தீயணைப்புத்துறை குழுவினருடன் இணைந்து 20-க்கும் மேற்பட்ட கிராம இளைஞர்களுடன் நீரில் மூழ்கியதாக கூறப்படும் கண்ணனை மூன்று மணி நேரமாக தேடி உடலை மீட்டனர்.

பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த, மதுரை எஸ் .எஸ். காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 8:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  5. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  6. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  8. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  10. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...