/* */

திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி விழா வரும் 25ஆம் தேதி காப்புக்காட்டுதலுடன் தொடக்கம்

Kandha Sashti Viratham -மதுரை மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கோவிலில் தங்கி 6 நாட்கள் விரதம் இருப்பார்கள்

HIGHLIGHTS

திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி விழா வரும் 25ஆம் தேதி காப்புக்காட்டுதலுடன் தொடக்கம்
X

பைல் படம்

Kandha Sashti Viratham -திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என பெருமை பெற்றது. இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 25-ஆம் தேதி கந்த சஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. 1500 பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விழா வருகின்ற 25-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழா வின் முக்கிய நிகழ்ச்சி யாக வருகின்ற 29-ஆம் தேதி அம்பாளிடம் முருகப் பெருமான் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 30-ஆம் தேதி சந்நிதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு சூரசம்கார நிகழ்ச்சியும், விழாவின் சிகர நிகழ்ச்சியாக 31-ஆம் தேதி காலை முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்த ருளி சிறிய சட்டத்தேரில் வலம் வரும் நிகழ்ச்சியும் அன்று மாலை 3 மணி அளவில் பாவாடை தரிசனமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு விழாவினையொட்டி மதுரை மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கி 6 நாட்கள் விரதம் இருப்பார்கள். தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்காக காலையில் பால், எலுமிச்சைச்சாறு, திணை மாவு மற்றும் 1500 பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் காலையிலும் மாலையிலும் நடைபெறும் சண்முகார்ச்சனை விழா வினை பார்ப்பதற்காக கோவிலில் பல்வேறு இடங் களில் பெரிய அளவிலான திரைகள் வைக்கப்பட்டு நேரடியாக ஒளி பரப்பு செய்யப்படும். பக்தர்களுக்கு சரவணப் பொய்கையில்குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் கோவில் வாசல் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் கழிப்பறை வசதிக ளும் கோயில் நிர்வாகத்தினாலால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 25-ந் தேதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளதால் அன்றைய தினம் பிற்பகல் 11.30 மணி அளவில் கோவில் நடை சார்த்தப்பட்டு இரவு 7 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவை ஒட்டி தங்கி விரதம் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்காக காலையில் பால், எலுமிச்சைச்சாறு, திணை மாவு மற்றும் 1500 பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, மதுரை அருகே சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமான பிரளயநாத சிவன் ஆலயத்திலும், தென்கரை மூலநாத சுவாமி ஆலயத்திலும், இம் மாதம் 25-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கி, 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர்கள், பக்தர்கள் குழுவினர் செய்துவருகின்றனர்..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Oct 2022 11:32 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்