/* */

திருப்பரங்குன்றத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

திருப்பரங்குன்றம் அருகே பாழடைந்த கட்டிடத்தில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பரங்குன்றத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
X

அழுகிய நிலையில் காணப்படும் ஆண் சடலம். 

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ரயில்வே தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், இவர் முயல் பிடிப்பதற்காக, திருப்பரங்குன்றம் அருகே உள்ள சோமசுந்தரம் காலனி பகுதியில் பழைய பாழடைந்த கட்டடத்திற்கு சென்றார்.

அப்போது, பாழடைந்த கட்டடத்தின் நடுவே சென்ற போது அங்கு முழுவதும் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்ற பிரசாத், உடனடியாக திருப்பரங்குன்றம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் மற்றும் திருப்பரங்குன்ற சரக காவல் உதவி ஆணையர் சண்முகம் ஆகியோர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருப்பரங்குன்றம் போலீசார் இறந்த நபர் கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 Oct 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு