கூட்டணி குறித்து நாடாளுமன்ற குழுதான் முடிவு செய்யும்: ஹெச்.ராஜா தகவல்

மாநிலங்களில் கூட்டணி குறித்து நாடாளுமன்ற குழுதான் முடிவு செய்யும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கூட்டணி குறித்து நாடாளுமன்ற குழுதான் முடிவு செய்யும்: ஹெச்.ராஜா தகவல்
X

ஹெச். ராஜா, பாஜக.

மாநிலங்களில் கூட்டணி குறித்து நாடாளுமன்ற குழுதான் முடிவு செய்யும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய குழு உறுப்பினர் ஹெச். ராஜா டெல்லி செல்லும் முன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அதிமுகவுடன் கூட்டணி குறித்து அண்ணாமலை கூறிய கருத்திற்கு, அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆகையால் மீசை முளைக்கட்டும். அதுவரை அத்தை அத்தை தான் என ஹெச்.ராஜா கூறினார்.

பாஜகவில் கூட்டணி குறித்து எந்த முடிவுகளும் மாநில தலைவரோ மற்ற நிர்வாகிகளும் அறிவிக்க முடியாது. ஆலோசனைகள், வழிமுறைகள், கருத்துக்களை பதிவு செய்யலாம். ஆனால், கூட்டணி குறித்து முடிவு எடுப்பது பாஜகவின் பாராளுமன்ற குழு மட்டுமே.

கடந்த இரு நாட்களுக்கு முன் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறியது குறித்து செய்தி வந்துள்ளது . அது உண்மை அல்ல. பாஜக அதிமுக கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது, மாநில தலைவரோ மற்ற நிர்வாகிகளோ கிடையாது. கூட்டணி குறித்து, வழிமுறைகள் மட்டுமே கருத்துக்களை பதிவு செய்ய முடியும்.

இது, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலத்திலும் அதற்கு முன்னர் சுந்தர் பண்டரி காலத்திலும் இருந்து நடைமுறையில் வந்துள்ளது.

ஆகவே, மாநில கூட்டத்தில் கூறப்படும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு ,மத்திய குழு மட்டுமே விவாதித்து முடிவு செய்யப்படும் என, ஹெச்.ராஜா கூறினார்.

திருச்சியில் கே.என்.நேரு, சிவா எம்பி இடையே ஏற்பட்டது, தற்காலிக சமரசம் என வெளிப்படையாகவே தெரிகிறது. மேலும், கத்தி ,கம்பு போன்றவற்றை கொண்டு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவா அவர்களின் வீடுகளில் தாக்கியுள்ளனர். அத்துடன் காவல் நிலையத்தை தாக்கியுள்ளனர். ஆனால், இதுவரை யாருமே கைது செய்யப்படவில்லை. அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பது உண்மை. மேலும், இது தற்காலிகமான சமரசமாகவே தெரிகிறது . உடைந்த பானை ஒட்டாது என்பது போல் உள்ளது என்றார்.

அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் எனக் கூறிய கேள்விக்கு, நான், சமீபத்தில் கோவை சென்று இருந்தேன் அங்கு எனது 40 ஆண்டு கால நண்பர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தில்லி செல்லும் முன், கோவையில் செ.மா. வேலுச்சாமி, பொள்ளாச்சி ஜெயராமனை சந்தித்தேன். அவர்களுக்கு, எந்த விதமான கருத்துகளும் இல்லை. ஒரு சில தலைவர்கள் பதில் கூறியிருக்கலாம். அதற்கு பதில் கூற முடியாது என ஹெச். ராஜா கூறினார்.

Updated On: 2023-03-19T15:42:14+05:30

Related News

Latest News

  1. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  2. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  3. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  5. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
  6. சோழவந்தான்
    மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
  7. உலகம்
    ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
  8. கோவில்பட்டி
    கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
  9. திருச்செந்தூர்
    மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…
  10. மேலூர்
    மதுரை அருகே ஆலத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்