/* */

மதுரையில் நள்ளிரவில் போலீஸார் பைக்கில் தீ வைத்த மரம் நபர்கள்

Madurai News Tamil -மதுரையில் நள்ளிரவில் போலீஸார் பைக்கில் தீ வைத்த மரம் நபர்கள்

HIGHLIGHTS

மதுரையில் நள்ளிரவில் போலீஸார் பைக்கில்  தீ வைத்த மரம் நபர்கள்
X

திருப்பரங்குன்றம் ராஜிவ்காந்தி நகர் பகுதியில் நள்ளிரவில் தீவைக்கப்பட்ட  மோட்டார் பைக்

Madurai News Tamil -திருப்பரங்குன்றம் ராஜிவ்காந்தி நகர் பகுதியில் நள்ளிரவில் பைக்கிற்கு தீவைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா , ராஜீவ் காந்தி நகர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்துவருகிறார். இவரது மகன் ராஜ்குமார் ( 29). இவர் , மதுரை மாநகர் காவல் துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று நள்ளிரவு 2 மணியளவில் வீட்டின் வாசலில் திடீரென வெளிச்சமாக தெரிந்ததையடுத்து. வீட்டின் கதவை திறந்து பார்த்த போது ,வாசலில் இருந்த பைக் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

உடனே, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பைக்கை தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து, திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் சுந்தரி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.காவல் துறையில் பணிபுரியும் காவலர் பைக்கை தீ வைத்து எரித்தது குறித்து இப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 Jun 2022 11:31 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து