/* */

மதுரை அருகே சரவண பொய்கையில் குதித்து இளைஞர் தற்கொலை

திருமணம் ஆகாத விரக்தியில் மதுரை திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்

HIGHLIGHTS

மதுரை அருகே சரவண பொய்கையில் குதித்து இளைஞர் தற்கொலை
X

திருமணம் ஆகாத விரக்தியில், மதுரை திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை சேர்ந்தவர் ஞானபண்டிதன் . இவரது மகன் ராஜராஜன்(31) இவர், மதுரை முத்துப்பட்டியில் தனியாக தங்கி ஹோட்டலில் வேலை செய்து வருகிறார்.

திருமணம் செய்து வைக்க சொல்லி பெற்றோருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி ராஜராஜன் தனியாக வசித்து வந்துள்ளார்.மேலும், கடந்த வாரம் ராஜராஜனின் சகோதரருக்கு திருமணம் நடைபெற்றது. ராஜராஜனுக்கு கிடைத்த தகவலால் மேலும் மன உளைச்சல் அடைந்தார். இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் உள்ள சரவண பொய்கை குளத்திற்கு வந்த ராஜராஜன் யாரும் இல்லாத நேரத்தில் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ராஜராஜனின் உடலை வீட்டு உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இச்சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 26 Aug 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...