/* */

தமிழ் மக்களை தலை நிமிரச் செய்தவர் கருணாநிதி: தமிழச்சி தங்கப் பாண்டியன்

இந்தியாவிற்கே முன்னோடியான திட்டமாக விளங்குவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழ் மக்களை தலை நிமிரச் செய்தவர் கருணாநிதி: தமிழச்சி தங்கப் பாண்டியன்
X

பைல் படம்

தமிழக மக்களை தலை நிமிரச் செய்த கலைஞரின் பேனாவிற்கு சிலை வைப்பது பொருத்தமாக இருக்கும் என்றார் திமுக எம்பி தமிழச்சிதங்கபாண்டியன்.

மதுரை விமான நிலையத்தில் தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:கலைஞரின் கையெழுத்தால் உருவான திட்டங்கள் ஒவ்வொரு முறையும் தமிழக மக்கள் தலை நிமிர்ந்துள்ளார்கள் அதனால் கலைஞர் நினைவிடம் அருகே பேனா சிலை வைப்பது பொருத்தமாக இருக்கும். தமிழக முதல்வர் பெண்களின் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு "புதுமைப் பெண்" திட்டத்திற்கான மாதந்தோறும் 12 ஆம் வகுப்பு படித்து முடித்து உயர் கல்வியில் சேர விருப்பம் உடைய பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்கிற திட்டத்தை புதுமைப் பெண் திட்டம் என்ற பெயரில் நேற்றைய தினம் தொடங்கி வைத்தார்

இந்த திட்டமானது ஏற்கெனவே முதலமைச்சருடைய கனவு திட்டங்களில் மிகப் பிரதானமாக இந்த திட்டம் பெண்கள் கல்வி அறிவு பெற்றால் தான் அவருடைய வாழ்வு நிலை முன்னேறும் என்பதை கருத்தில் வைத்தே முதல்வர் பிற உதவித்தொகை பெற்றுக் கொண்டிருந்தாலும், அதோடு இணைந்து இந்த தொகை வழங்கப்படும் எனவும், இந்த தொகையானது அவர்களது உயர்கல்விக்கு உதவியாக இருக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார். பெண்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவிற்கே முன்னோடியான திட்டமாக விளங்குவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நம் தாய்மார்களும் தங்களது பிள்ளைகளுக்கான கல்வி வளர்ச்சிக்கு இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள முன் வர வேண்டும்.கலைஞரின் ஆட்சி பள்ளி கல்வியில் ஒரு பொற்காலம் என்றால் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி உயர்கல்வித் துறையில் ஒரு பொற்காலம்.

பள்ளி கல்லூரிகளில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை உருவாவதாகிறது குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன, இதை குற்றச்சாட்டாக கூற முடியாது ஆண் மாணவர்களும் பெண் மாணவர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது .பொதுவெளியில் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைக்க பள்ளி கல்வித்துறை முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

சேலம் எட்டு வழி சாலை என்ற பிரச்னை வேற எத்தனை பசுமையான இடங்களை காவு கொடுத்து உருவாக்கப்பட்டது என்பது நீங்கள் அறிவீர்கள் அதற்கும் இதற்கான ஒரு ஒத்த கருத்தை சரியாக வைக்க வேண்டும் மக்களுக்கான அரசு தான் இது ஆகவே மக்களுடைய கருத்துகளை கேட்ட பின்பு தான் முதல்வர் அவர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள். ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படம் வைக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது குறித்த கேள்விக்கு தெலங்கானாவில் இந்த பிரச்னை வந்தபோது கேஸ் சிலிண்டரில் மோடி படத்தை வைத்து அவர்களுக்கு பதிலடி கொடுத்தார்கள் மத்திய அரசிடம் இருந்து மானியம் வந்தாலும் நமக்கான முக்கியமான ஒரு வகையிலே அனைவருக்கும் அந்த அரிசி சென்று சேர்கிறதா என்பதில் தான் கவனம் செலுத்தி வருகிறோம்.

ஆகவே மத்திய அரசு ஒன்றிய அரசு மாநில அரசு என்ற எதுவும் இதில் கிடையாது ஆனால் அரிசிக்கு மானியம் கொடுத்தாலும் அனாவசியமான விலை ஏற்றம் உள்ளது சுங்கவரி மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு இப்படி பல பிரச்னைகளில் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு குறைவாக இருப்பதால் நாம் அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

நிதிச் சுமைக்காக அந்தத் திட்டத்தை முதல்வர் கைவிட வேண்டும் என சொல்லவில்லை இப்போது இல்லை அடுத்ததில் கொண்டு வருவோம் என்று சொல்லி இருப்பார். நினைத்து பாருங்கள் கலைஞருடைய பேனா எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்றும் கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு என முதன் முதலில் கையெழுத்து போட்ட பேனா கலைஞரின் பேனா. அவர் பேனாவை தூக்கிய ஒவ்வொரு நிமிடங்களும் தமிழருடைய தலைவிதி நிமிர்த்திருக்கிறது அத்தனை கோடி கையெழுத்துக்களை போட்ட அந்த பேனாவை அவருடைய நினைவு சின்னமாக கொண்டு வருவது என்பது சாலப் பொருத்தமாகும். எந்த காரண காட்டியும் எந்த திட்டத்தையும் நமது முதல்வர் கைவிடவில்லை கூடிய விரைவில் அதை அமல்படுத்துவோம் என்பதுதான் முதல்வர் மக்கள் முன்பாக வைக்கிற கருத்து என தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறினார்.

Updated On: 7 Sep 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது