Begin typing your search above and press return to search.
மதுரையில் பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்
மதுரையில் பலத்த காற்று இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிய மழையால் தண்ணீர் பெருக்கெடுத்தோடியது
HIGHLIGHTS
மதுரையில் பலத்த காற்று இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மதுரை மாநகர் பகுதிகளில் மாலை ஆறு மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. குறிப்பாக, முன்னே செல்லும் வாகனம் தெரியாத அளவிற்கு பலத்த மழை கொட்டி தீர்த்தது.குறிப்பாக, பழங்காநத்தம் பைபாஸ் ரோடு காளவாசல் அரசர் அடி பெரியார் பேருந்து நிலையம் ,சிம்மக்கல், மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் பல பகுதிகளில் நீர் தேங்கி ஆறு போல் ஓடியது. பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.