/* */

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் குட்கா பதுக்கி வைத்திருந்தவர் கைது

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் பெட்டிக்கடையில் 21 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் குட்கா பதுக்கி வைத்திருந்தவர் கைது
X

குட்கா பதுக்கியதாக கைது செய்யப்பட்டவர்.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதிகளில் அதிகமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் புகையிலை தடுப்பு சம்பந்தமாக கடைகளில் தீவிர சோதனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நாகமலை புதுக்கோட்டை நடுநிலைப் பள்ளி அருகே பெட்டி கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்களை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் கடை உரிமையாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அந்த நபர் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த ஜெயகணேஷ் வயது (43) என்பது இவர் நாகமலை புதுக்கோட்டையில் குடும்ப வறுமை காரணமாக தஞ்சம் புகுந்து பெட்டிக்கடை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து ஜெயகணேஷிடம் இருந்த 21 கிலோ எடை கொண்ட குட்கா, பான் மசாலா 50 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 24 Jan 2022 6:53 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...