/* */

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தக் கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
X

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை துரிதப்படுத்தக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தக்கோரி மதுரையில் தி.மு.க. கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. பின்னர் இதற்கு மதுரை தொப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு சென்றார். ஆனால் அதன் பின்னர் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. த மருத்துவமனை கட்டும் பணி தொடங்குவது வரை பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. தற்போது, வரை முழுமையான பணிகள் தொடங்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி, அவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடக்கிறது.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி வருவது தாமதமாகும் நிலையில், மத்திய அரசு தன் பங்கீடான ரூ.400 கோடியை வரும் பட்ஜெட்டில் ஒதுக்கி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மதுரை, பழங்காநத்தம் பகுதியில் தொடர் முழக்க போராட்டம் நடத்தினார்கள்.

மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், மற்றும் காங்கிரஸ், தி.மு.க, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது, கூட்டணி கட்சியினர் கையில் செங்கல் ஒன்றை எடுத்துக்காட்டிய படி 'எய்ம்ஸ் எங்கே?' என்று முழக்கமிட்டனர்.

Updated On: 24 Jan 2023 11:06 AM GMT

Related News