/* */

கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

Robbery News - பசுமலை விபூதி விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
X
கொள்ளையடிக்கப்பட்ட கோவிலில் விசாரணை நடத்தும் போலீசார்.

Robbery News -மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலை விபூதி விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பசுமலை ஜி.எஸ்.டி. சாலையில் அருள்மிகு விபூதி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், நேற்று காலையில் வழக்கம்போல் பூசாரி கோவிலை திறக்க வந்தபோது, அங்கு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக , கோயில் நிர்வாகிகள்ன மற்றும் திருப்பரங்குன்றம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உண்டியலில் உள்ள கைரேகை சேகரித்தனர். கோயில் உண்டியலில் சுமார் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் இருக்கலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, இரண்டு முறை இந்த கோவிலில் உண்டியல் இதுபோன்ற திருட்டு நடைபெற்ற நிலையில், தற்போது மூன்றாவது முறையாக திருட்டு நடைபெற்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 Jun 2022 11:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி