Begin typing your search above and press return to search.
பாபர் மசூதி இடிப்பு நாள்: மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு
அதிதீவிர அதிரடிப்படை வீரர்கள் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாயுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
HIGHLIGHTS
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் உள்வளாகம், ஓடுதளம் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் விமான நிலைய வெளிப்புறம் ஆகியவற்றில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், விமான நிலைய நுழைவாயில் சோதனை சாவடி மற்றும் வெளி வளாகம் ஆகிய பகுதிகளில் மதுரை மாநகர போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அதிவேக அதிரடிப்படை வீரர்கள் அடங்கிய குழுவினர் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.