/* */

குறைந்த விலையில் கரும்பை கொள்முதல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை : அமைச்சர்

தமிழக உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி மதுரை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்தார்

HIGHLIGHTS

குறைந்த விலையில் கரும்பை கொள்முதல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை :    அமைச்சர்
X

குறைந்த விலையில் கரும்பு கொள்முதல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த தமிழக உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது மேலும் கூறியதாவது: திருத்தணியில் மகன் தற்கொலை சம்பவத்தில் தந்தை மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. பொங்கல் தொகுப்பில் பல்லி இறந்து கிடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் கோட்டாட்சியர் சம்பந்தப்பட்ட பொருளை கொண்டு வர கேட்டபோது அவர் வேறு பொருளை மாற்றிக் கொண்டு வந்ததால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டது .

கரும்பு கொள்முதல் அரசு நிர்ணயித்த விலையை விட குறைந்த விலைக்கு அதிகாரிகள் கொள்முதல் செய்ததாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். இது சம்பந்தமாக முதல்வர் விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த விலையை கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார் . இந்த அடிப்படையில்தான் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது .இதில் எந்த தவறும் நடக்கவில்லை என தெரிவித்தார் .

குறைந்த விலைக்கு கொள்முதல் செய்ததாக சுட்டிக்காட்டினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 90% வழங்கப்பட்டுள்ளது. மதுரையை பொருத்தவரை 80% வழங்கப்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் அனைவருக்கும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

Updated On: 13 Jan 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்