மதுரை: தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கத்தின் மாதாந்திர இயற்கை மருத்துவ முகாம்
மதுரையில் புதிதாக இயற்கை மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது - தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்க செயலர் அன்புசிவம்.
HIGHLIGHTS
தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கத்தின் மாதாந்திர இயற்கை மருத்துவ முகாமானது, இன்று மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தி நினைவுநிதி அரங்கில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 1.30 மணிக்கு நிறைவடைகிறது.
மாதம் தோறும் இயற்கை மருத்துவம், ஆரோக்கியம் சார்ந்து பல்வேறு முகாம்களை நடத்தி வரும் தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கம் செயலர் அன்புசிவம் இந்த முகாம் குறித்து கூறியதாவது :
பிணியின்றி, பிணிவரினும் மருந்தின் தேவையின்றி நடையிட அதற்கான நலவாழ்வு வழி முறைகளைத் இந்த முகாமில் தெரிந்து கொள்ளலாம்.
இயற்கை உணவு, இயற்கை வாழ்வியலை பற்றியும் இந்த முகாமில் கற்பிக்கப்படுகிறது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனம் பழத்தின் மூலம் கிடைக்கக்கூடிய பதார்த்தங்களைப் பற்றியும் இயற்கை உணவு, இயற்கை வாழ்வியலை பற்றியும் இந்த முகாமில் கற்பிக்கபடுகிறது. இந்த முகாமில் மதியம் இயற்கை உணவு உண்டு. அதற்கான கட்டணமாக ரூபாய் 50 செலுத்த வேண்டும், வழக்கமாக நடைபெறும் முகாமில் கலந்து கொள்ள 94434 24770 மற்றும் 87788 1971 8 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.