/* */

குட்லாடம்பட்டி அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்களா

மதுரை அருகே அருவியில் கொட்டும் நீர்வீழ்ச்சி குளிக்க தடை விதித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்

HIGHLIGHTS

குட்லாடம்பட்டி அருவியில்  பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்களா
X

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டி கிராமத்திற்கு வடக்கே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள குட்லாடம்பட்டி அருவி

தொடர் மழை காரணமாக மதுரை அருகே அருவியில் கொட்டும் நீர்வீழ்ச்சி குளிக்க தடை விதித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்.

குட்லாடம்பட்டி அருவி, மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டி கிராமத்திற்கு வடக்கே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சிறுமலையில் மழை பெய்யும் காலங்களில், இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். இதுபோன்ற நேரங்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமான அளவில் இங்கு குவிகின்றனர். இந்த அருவியில் வருடத்தில் ஐந்து முதல் எட்டு மாதங்கள் வரை தண்ணீர் வரத்து இருக்கும். வாரம் முழுவதும் மக்கள் வந்தாலும்கூட சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

குளிர்ந்த சாரல் காற்றுடன் அருவிகளில் குளித்தால் மனமும், உடலும் புத்துணர்ச்சி பெறும். ஆனால், அப்படி ஆண்டு முழுவதுமே தண்ணீர் கொட்டும் அருவிகள் தமிழகத்தில் இல்லை. தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழைகளை சார்ந்தே அருவிகளில் தண்ணீர் வருகிறது. தமிழகத்தில் குற்றாலம் அருவி, திற்பரப்பு அருவி, கும்பகரை அருவி, அருளி அருவி, ஒகேனக்கல் அருவி, மற்றும் குட்லாடம்பட்டி அருவி போன்ற 10 குருவிகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. இதில், குற்றாலம் அருவில் மட்டும் சீசனை தாண்டி மேற்கு தொடர்ச்சி மலையிலே இலேசான மழை பெய்தாலே தண்ணீர் வருகிறது. மேலும், சீசன் நேரத்தில் கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

சுற்றுலாத் துறையும், தமிழக அரசும் இந்த அருவிக்கு முக்கியத்துவம் கொடுத்து பராமரிப்பதாலே குற்றாலம் அருவி முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. குற்றாலம் அருவி போல் மற்ற அருவிகளும் ஒவ்வொரு வகையில் சிறப்பும், தனித்துவமும் வாய்ந்தவைகளாகதான் உள்ளன. ஆனால், வனத்துறை கட்டுப்பாடுகளும், பராமரிப்பும் இல்லாததால் குற்றாலம் போல் மற்ற அருவிகள் சுற்றுலா முக்கியத்துவம் பெறாமல் உள்ளன.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அருவி உள்ளது. "மதுரையின் குற்றாலம்" "சின்ன குற்றாலம்"என அழைக்கப்படும் தாடகை நாச்சியம்மன் நீர் அருவி உள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அறிவியல் தண்ணீர் ஆர்ப்பரித்து ஆனால் தமிழக அரசும் வனத்துறையும் பாதுகாப்பு எஎன்ற காரணம் சொல்லி சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதி மறுத்து வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பள்ளி விடுமுறை நாட்களிலும் மற்றும் ஓய்வு நாட்களிலும் அருவியில் குளித்து மகிழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் உடை மாற்றும் இடம், அருவிக்குச் செல்லும் பாதை ஆகியன போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளதாக கூறி வனத்துறை சார்பில் அனுமதி மறுத்து வந்தனர். இதனால் அருவியில் இருந்து கீழே விழும் தண்ணீரில் குளிக்க முடியாதவர்கள் ஓடையில் குளித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து மதுரை குலமங்கலத்தைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் கூறும் போது, மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரே சுற்றுலா தளம் இதுதான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நாங்கள் பல முறை இங்கு சுற்றுலா வந்து குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து வந்தோம். கடந்த 2 ஆண்டுகளாக மதுரை குட்லாடம்பட்டி அருவியை வனத்துறை பூட்டி வைத்துள்ளதால் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட சுற்றுலாப் பயணிகள், இந்த மினி குற்றலாத்தில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதனை தமிழக அரசு உடனடியாக பெண்கள் உடை மாற்றும் அறை மற்றும் அருவிக்கு செல்லும் பாதை ஆகியவற்றை பராமரித்து குளிக்க அனுமதி வழங்க வேண்டும்.மேலும்.சுற்றுலா துறை சார்பில் மேம்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அதிக அளவில் போலீசார் நியமித்து தகுந்த பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


Updated On: 6 Nov 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!