/* */

சோழவந்தான் அருகே குடிநீர் வேண்டி கிராம மக்கள் சாலை மறியல்

பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே குடிநீர் வேண்டி கிராம மக்கள் சாலை மறியல்
X

 அலங்காநல்லூர் அருகே  குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட சின்ன இலந்தைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட மரியம்மாள்குளம் பகுதி மக்கள்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன இலந்தைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட மரியம்மாள்குளம் பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாமல் குடிதண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீர் வேண்டி அலங்காநல்லூர் தனிச்சியம் பிரதான சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் இரண்டு நாட்கள் அப்பகுதிக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டு குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை என்றும், இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், துணைத் தலைவர் மெர்லின் குமாரி, ஊராட்சி செயலாளர் கவிதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி. மீண்டும் மின்சார விநியோகத்தை சரி செய்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

கோடை காலம் தொடங்கி விட்டது. எதிர்பார்த்த மழை பொழிவு இல்லாததால் வறட்சி மெல்ல மெல்ல தலை தூக்க ஆரம்பித்துள்ளது. கோடையை சமாளிக்க இரவு பகல் என்ற பாகுபாடின்றி ஏசி, பிரிட்ஜ், மின் விசிறி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின் தேவையும் அதிகரித்து விட்டது. தற்போதைய தமிழகத்தின் தேவை வீடுகளுக்கான தடையில்லா மின்சார விநியோகம் மட்டுமே. இதில் எவ்வித இடையூறும் இல்லாது கண்காணிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழக மின்வாரியத்தில் கையில் உள்ளது. எனவே, இதில் எதிர்பாராமல் ஏற்படும் மின் தடையால் மக்கள் சாலைக்கு வர வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதைத்தடுக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும் என சமுக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Updated On: 25 March 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  2. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  3. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  4. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  6. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  7. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  8. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?