/* */

ஓய்வு பெற்ற காவல் சார்பு ஆய்வாளர் கத்தியால் குத்தி கொலை

திருவிழாவில் பங்கேற்ற ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளரை கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ஓய்வு பெற்ற காவல் சார்பு ஆய்வாளர் கத்தியால் குத்தி கொலை
X

கொலை செய்யப்பட்ட ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் ஜோதி.

மதுரை மாவட்டம், தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அந்த திருவிழாவில் ஜோதி பங்கேற்றுள்ளார். அப்போது அங்கு வந்த போதை ஆசாமிகள் சிலர் கையில் வைத்திருந்த பணத்தை அபகரிக்க முயன்றனர்.

அதனை தடுக்க முயன்ற ஜோதியை கத்தியால் குத்தியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவிழாவிற்கு சாமி கும்பிட வந்த ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் கொலை சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 9 Jun 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
  2. தமிழ்நாடு
    தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
  3. வீடியோ
    Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
  4. வீடியோ
    Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
  5. இந்தியா
    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
  6. இந்தியா
    தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
  7. கிணத்துக்கடவு
    ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
  8. வீடியோ
    Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
  9. வீடியோ
    கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
  10. வீடியோ
    திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...