/* */

ஊராட்சிமன்ற நிதியில் முறைகேடு: உறுப்பினர்கள் பதவி விலகுவதாக அறிவிப்பு

மதுரைமாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் நிதி ஒதுக்குவதில் முறைகேடு நடப்பதாக உறுப்பினர்கள்புகார்

HIGHLIGHTS

ஊராட்சிமன்ற நிதியில் முறைகேடு: உறுப்பினர்கள் பதவி விலகுவதாக அறிவிப்பு
X

மேலக்கால் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுமார் ஏழு பேர் ராஜினாமா கடிதத்துடன் யூனியன் அலுவலகம் முன்பு வந்து பரபரப்பை ஏற்படுத்தினர்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலக்கால் ஊராட்சியில் தேசிய ஊரக வளர்ச்சி நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக உறுப்பினர் புகார் தெரிவித்து பதவி விலகுவதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேசிய ஊரக வளர்ச்சி திட்ட நிதியில் முறையாக வார்டுகளுக்கு ஒதுக்காமல் ஊராட்சி நிதியே ஒப்புதல் பெறாமல் தீர்மானம் நிறைவேற்றியதாக கூறி ஊராட்சி மன்ற 8-வார்டு உறுப்பினர்கள் தலைவர் துணைத் தலைவரை சந்தித்து கணக்கு அறிக்கை கேட்டபோது முறையான அறிவிப்பு கொடுக்கவில்லை. அதற்கான பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது

இந்த நிலையில், ஏழு மாதங்களுக்குப் பிறகு மேலக்கால் ஊராட்சி மன்றத்தின் தலைவர் தலைவர் முருகேஸ்வரி தலைமையில் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தீர்மானங்கள் குறித்து காரசாரமாக கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு வாக்குவாதம் எழுந்தது.இதையடுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுமார் ஏழு பேர் ராஜினாமா கடிதத்துடன் யூனியன் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். இதனால் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது

Updated On: 8 Jan 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  10. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!