/* */

அடிப்படை வசதிகள் இல்லாத சோழவந்தான் தாற்காலிக பஸ்நிலையம்

அரசு உரிய கவனம் செலுத்தி கட்டி முடிக்கப்பட்ட புதிய பஸ் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

HIGHLIGHTS

அடிப்படை வசதிகள் இல்லாத  சோழவந்தான் தாற்காலிக பஸ்நிலையம்
X

அடிப்படை வசதி இல்லாத சோழவந்தான் தாற்காலிக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம், சோழவந்தானில் அடிப்படை வசதி இல்லாமல் செயல்படும் தற்காலிக பஸ் நிலையதில் பயணிகள் சிரமப்படும் நிலை தொடர்கிறது.

சோழவந்தானில், ஏற்கெனவே, இருந்த பஸ் நிலையம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் திறக்கப்படவில்லை. தற்போது, சோழவந்தானில் இயக்கப்பட கூடிய அனைத்து பேருந்துகளும் பயணிகளை ஏற்றி இறக்கி விடுவதற்கான இடவசதி ஒதுக்கப்படவில்லை. இதனால், ரயில்வே பீடர் ரோட்டில் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. பஸ்சுக்காக காத்து இருக்க கூடியவர்களுக்கு போதுமான அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை.

இதனால், பயணிகள் வெயிலிலும், மழையிலும் ஒதுங்க கூட இடமில்லாமல் சிரமப்படுகின்றனர். பயணிகளுக்கு தற்காலிக நிழற்குடை குடிநீர் வசதி சிறுநீர் கழிப்பதற்கு வசதி இப்படி அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. தற்காலிக பஸ் நிலையம் அமைக்காததால், வரக்கூடிய பஸ் எங்கு நிற்கிறது என்று தெரியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். ஆகையால், அரசு உரிய நடவடிக்கை எடுத்து புதிய பஸ் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 1 Oct 2021 5:44 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!