/* */

அலங்காநல்லூர் அருகே கார் ஊருணிக்குள் கவிழ்ந்து விபத்து: 2 பேர் மரணம்

மதுரை செல்லூரிலிருந்து காரில் அச்சம்பட்டி பெரியாறு பிரதானக் கால்வாயில் குளிக்க சென்றுவிட்டு திரும்பியபோது இந்த விபத்து நேரிட்டது

HIGHLIGHTS

அலங்காநல்லூர் அருகே கார் ஊருணிக்குள் கவிழ்ந்து விபத்து: 2  பேர்  மரணம்
X

பைல் படம்

அலங்காநல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஊருணிக்குள் பாய்ந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மதுரை செல்லூரைச் சேர்ந்த வேல்பாண்டி உள்பட 5 பேர் அச்சம்பட்டிக்கு பெரியாறு பிரதானக் கால்வாயில் குளிப்பதற்காக காரில் சென்று விட்டு, திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த கார் அச்சம்பட்டி ஊருணிக்குள் பாய்ந்தது. இவ்விபத்தில் காரில் பயணம் செய்த செல்லூரைச் சேர்ந்த அரவிந்தன்( 27) , சித்திக்( 27) ஆகிய இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.மேலும், காரில் பயணம் செய்த டிரைவர் வேல்பாண்டி( 27), வீரபாண்டி(27) ,முத்துப்பாண்டி( 27) ஆகிய மூவர் பலத்த காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 19 Sep 2021 11:41 AM GMT

Related News