/* */

மதுரை அருகே வழக்கறிஞர்கள் சாலை மறியல்

வழக்கறிஞர்களை தாக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடந்தது

HIGHLIGHTS

மதுரை அருகே வழக்கறிஞர்கள் சாலை மறியல்
X

வாடிப்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.

வாடிப்பட்டியில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வாடிப்பட்டி வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குருவித்துறை ஹரிச்சந்திரன், கச்சைகட்டி குரு ஆகியோர் மீது தாக்குதல் நடந்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, மதுரை திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் மறியலுடன் கூடிய ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தலைவர் முத்துமணி தலைமை வகித்தார். செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வைத்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர்கள் செல்வகுமார், முத்துராமலிங்கம், ராமசாமி, தங்கப்பாண்டி, கார்த்திக், வெள்ளைச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். தகவலறிந்த வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Updated On: 23 Aug 2023 7:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்