/* */

அலங்காநல்லூர் அருகே மூங்கிலணை காமாட்சியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில், இரண்டு கால சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது

HIGHLIGHTS

அலங்காநல்லூர் அருகே மூங்கிலணை காமாட்சியம்மன் ஆலய கும்பாபிஷேகம்
X

அலங்காநல்லூர் அருகே மூங்கிலணை காமாட்சி அம்மன் திருக்கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழா

அலங்காநல்லூர் அருகே மூங்கிலணை காமாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே மேலசின்னணம்பட்டி கிராமத்தில், அமைந்துள்ள ஶ்ரீ மூங்கிலணை காமாட்சி அம்மன், விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களின் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில், இரண்டு கால சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.

கோ பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, வானத்தில் கருடன் வட்டமிட, மேளதாளங்களுடன் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, புனித நீர் கோவிலை சுற்றி வளம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, திருக்கோவில் வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பங்காளிகள் செய்தனர்.

Updated On: 26 May 2023 11:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்
  2. லைஃப்ஸ்டைல்
    'பாரபட்ஷம்' நியாயத்தை கொல்லும் கூர்வாள்..!
  3. மதுரை
    மதுரை வாக்குச்சாவடியில் காவி முண்டாசு கட்டிய தேர்தல் அலுவலர்!...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈருயிர் ஓருயிராக உருவெடுத்த கணவன்-மனைவி உறவு..!
  5. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  6. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சூலூர்
    104 வயதில் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய முதியவர்
  10. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!