Begin typing your search above and press return to search.
மதுரை அருகே பாலமேடு பேரூராட்சியில் தூய்மைப் பணி சேவை பிரசாரம்
தூய்மை இந்திய இயக்கம் மதுரை மாவட்ட பேரூராட்சிகள் துறையும் இணைந்து இந்த தூய்மைப்பணி சேவை பிரசாரத்தை நடத்தினர்.
HIGHLIGHTS
மதுரை மாவட்டம், பாலமேடு, பேரூராட்சியில் தூய்மை சேவை பிரசாரம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பாக, உலக தூய்மை பிரசார தினம் அனுசரிக்கப்பட்டது. இதை, பேரூராட்சி செயல் அலுவலர் பா.தேவி தொடங்கி வைத்தார். சுகாதரா ஆய்வாளர் முருகன் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர். இதில், வருவாய். ஆய்வாளர் மீனாட்சி, பேரூராட்சி வரிதண்டல் கிரண்குமார் இளங்கலை பூவியல் வல்லுனர் ரவி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை, தூய்மை இந்திய இயக்கம், மதுரை மாவட்ட பேரூராட்சிகள் துறையும் இணைந்து, பாலமேடு பேரூராட்சியுடன் இணைந்து, தூய்மைப் சேவை பிரசாரத்தை நடத்தியது.