மதுரையில் சித்திரைத் திருவிழாவை அறிய காவலன் செயலி: காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தகவல்

சித்திரைத் திருவிழாவின் ஒரு அங்கமான கள்ளழகர் அழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் கோவில் செல்லும் வரை எங்கு உள்ளார் என அறியும் காவலன் செயலி அறிமுகம்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மதுரையில் சித்திரைத் திருவிழாவை அறிய காவலன் செயலி: காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தகவல்
X

சித்திரைத் திருவிழாவின் ஒரு அங்கமான கள்ளழகர் அழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் கோவில் செல்லும் வரை எங்கு உள்ளார் என அறியும் காவலன் செயலி அறிமுகமானது.

மதுரை மாவட்ட மக்களின் பாதுகாப்பு வசதிக்காக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதுரை காவலன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையிலுள்ளது. சித்திரை திருவிழாவின்போது, மதுரை மக்களின் நலன் கருதி மதுரை காவலன் என்ற செயலியில் உள்ள Track Alagar என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த Track Alagar வசதியின் மூலம் வைகை ஆற்றில் இறங்குவதற்காக அருள்மிகு கள்ளழகர் எதிர் வரும் 14.4.2022 தேதி அழகர் மலையிலிருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் கோவில் செல்லும்வரை, கள்ளழகர் எந்த வழித்தடத்தின் வழியாக செல்கிறார், எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை தங்கள் செல்போனில் மதுரை காவலன் என்ற செயலில் Track Alagar என்ற Link மூலம் வரும் Map ல் தெரிந்து கொள்ளலாம். இதனால் மக்கள் நேரம் விரயமாவதை தடுக்க முடியும் மற்றும் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் குறித்த நேரத்தில் கள்ளழகரை தரிசிக்க முடியும். இதன்மூலம், போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமத்தை தவிர்த்து, கள்ளழகரை தரிசிக்க இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கள்ளழகரை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் தங்களின் Android செல்போனில், உள்ள Play Store ல் இலவசமாக மதுரை காவலன் செயலியை Download செய்து கொள்ளலாம். ஏற்கனவே, செயலில் Download செய்தவர்கள் அதனை அப்டேட் செய்த பின்னால் ,மதுரை காவல் செயலில் உள்ள Track Alagar ( கள்ளழகர் வருகை) என்ற Link மூலம் அருள்மிகு கள்ளழகர் இறங்கும் இடத்தை தெரிந்து கொள்ளலாம் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் தெரிவித்தார்.

இந்த மதுரை காவலன் செயலியில், இதுவரை 44 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளார்கள். மற்றும் இந்த செயலி மூலம் புகார்கள் 600, மற்றும் இந்த செயலில் locked home வரும் வசதி மூலம் இதுவரை 1100 தகவல்கள் பெறப்பட்டு உரிய ரோந்து ஏற்பாடு செய்து கண்காணிக் கப்பட்டுள்ளது. இந்த வசதியானது 2G செல்போனிலும் text message கள்ளழகர் வருகையை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். சித்திரை திருவிழா கள்ளழகர் வருகையினை முன்னிட்டு, அழகர் கோவிலிருந்து மதுரை மாநகர் வரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிக்கு சுமார் 1000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Updated On: 9 April 2022 6:09 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    கூட்டணியில் யாருக்கு அதிக பாதிப்பு?
  2. டாக்டர் சார்
    Rantac syrup uses in tamil-ராண்டக் சிரப் என்ன பாதிப்பிற்கு
  3. மதுரை மாநகர்
    கழிவு நீரை அகற்ற லஞ்சம்: மாநகராட்சி உதவிப் பொறியாளர் கைது
  4. சினிமா
    சந்திரமுகி 2 படம் சுமாருதான்.. ஆனா பாக்ஸ் ஆபிஸ்.... !
  5. தொழில்நுட்பம்
    Jupiter Planet In Tamil: மிகப்பெரிய கிரகமான வியாழன் பற்றிய தகவல்கள்
  6. டாக்டர் சார்
    Bowel movement meaning in tamil-குடல் இயக்கம் என்பது என்ன?
  7. லைஃப்ஸ்டைல்
    painful heart touching quotes in tamil: இதயத்தை தொடும் சில
  8. சினிமா
    வற்றிப் போன வடிவேலு சிந்தனை! முறிந்து போன முருகேசன் காமெடி!
  9. ஈரோடு
    ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்