Begin typing your search above and press return to search.
இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி மதுரையில் போராட்டம்
மதுரையில், காலியாகவுள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி, ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
தமி்ழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டக் கிளை சார்பாக, தமிழக முதல்வரின் தனிக்கவனத்தை ஈர்க்கும் வகையில், மாபெரும் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதில், மதுரையில் கள்ளர் சீரமைக்க வேண்டும், ஆசிரியர்கள் நீண்டகால கோப்புகளை சரி செய்ய வேண்டும், 10 ஆண்டுகளாக காலியாக உள்ள எழுபத்தி ஆறு இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை பழைய ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மதுரை மாவட்டத் தலைவர் த.முருகன், மாவட்ட செயலாளர் பே. தீணன், மாவட்டப் பொருளாளர் சீ. வேணி மற்றும் ஆசிரியர்கள் கூட்டணியினர் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர்.