/* */

மதுரை நிதி நிறுவனத்தை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை

மதுரை துரைசாமி நகரில் நிதி நிறுவனத்தில் மர்ம நபர்கள் கதவை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளையடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

மதுரை நிதி நிறுவனத்தை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை
X

கொள்ளையடிக்கப்பட்ட நிதி நிறுவனம்.

மதுரை மேலூரை சேர்ந்த குருசாமி. இவர் மதுரை துரைசாமி நகர் பகுதியில் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். பொங்கல் பண்டிகையையொட்டி, நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

பொங்கல் முடிந்து நேற்று காலை வந்து நிதி நிறுவனத்தை திறக்க முயன்றபோது, அலுவலக கதவை உடைத்து லாக்கரில் இருந்த சுமார் 5 லட்சம் 11 ஆயிரத்து 990 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குருசாமி, எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரை தொடர்ந்து போலீசார் கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநய் வரவழைத்து நிதி நிறுவனத்தை சோதனை மேற்கொண்டனர்.

மேலும் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 19 Jan 2022 3:41 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்