/* */

மதுரையில் வீட்டை உடைத்து நகைகளை திருடிய கொள்ளையர்கள் கைது

ஒத்தக்கடை மற்றும் கருப்பாயூரணி பகுதிகளில் வீடுகளை உடைத்து சுமார் 77 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் கைது

HIGHLIGHTS

மதுரையில் வீட்டை உடைத்து நகைகளை திருடிய கொள்ளையர்கள் கைது
X

மதுரை கொள்ளை சம்பவத்தில் கைதான கொள்ளையர்கள்

மதுரை மாவட்டத்தில் தாக்கல் ஆகும் குற்ற வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, சமீபத்தில் ஒத்தக்கடை மற்றும் கருப்பாயூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரண்டு வீடுகளை உடைத்து சுமார் 77 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கு சம்பந்தமாக, கொள்ளை வழக்கில் ஈடுபட்டவர்களை உடனடியாக, கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளி தமிழ்குமரன் ஆகியோரை கைதுசெய்து, அவர்களிடமிருந்து 77 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 இரண்டு சக்கர வாகனம் மற்றும் 1 நான்கு சக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இருவரும், இவ்வழக்கில் மட்டுமல்லாது, அன்றைய தினத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில், மணிகண்டன் என்பவருக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

இவ்வழக்கில் விரைந்து விசாரணை மேற்கொண்டு இருவரை கைது செய்த தனிப்படையினரை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பாராட்டினார். இதேபோல், மதுரை மாவட்டத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 16 May 2022 4:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  4. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  6. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்
  10. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!