/* */

ரயில் பாதை பராமரிப்பு பணி; போக்குவரத்து மாற்றம்

மதுரையில், ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்காக, ரயில் பாதை பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து, கலந்தாலோசிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ரயில் பாதை பராமரிப்பு பணி; போக்குவரத்து மாற்றம்
X

பாதுகாப்பாக ரயில்களை இயக்குவது குறித்து, ரயில்வே ஊழியர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.

ரயில் பாதை பராமரிப்பு பணிகளுக்காக, ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06663) மற்றும் செங்கோட்டையிலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06664) ஆகியவை டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

மேலும் ,மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) டிசம்பர் 5 முதல் 10 வரையும் டிசம்பர் 12 முதல் 15 வரையும் 10 நாட்களுக்கு மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06654) டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை வியாழக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து, காலை 11.00 மணிக்கு பதிலாக மதியம் 12 மணிக்கு 60 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும். மதுரை - கச்சக்குடா வாராந்திர விரைவு ரயில், டிசம்பர் 7 அன்று மதுரையில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 6.30 மணிக்கு, 60 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

ரயில்வே ஊழியர்களுடன் கலந்துரையாடல்

ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதில் முக்கியமானவர்கள் ரயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள், ரயில் இன்ஜின் டிரைவர்கள், நிலைய அதிகாரிகள், பாயிண்ட்ஸ் மேன்கள், ரயில் பெட்டி பராமரிப்பு பணியாளர்கள், மின் பாதை பராமரிப்பு பணியாளர்கள், ரயில் மேலாளர்கள், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர் ஆவர். இந்த ஊழியர்களுடன் ரயில்களை பாதுகாப்பாக இயக்குவது சம்பந்தமாக கலந்துரையாடல் நிகழ்ச்சி, மதுரை ரயில்வே திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட ஊழியர்கள் ரயில்களை மேலும் பாதுகாப்பாக இயக்குவதற்கு பணியிடங்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள் மற்றும் பல்வேறு புதிய ஆலோசனைகளை தெரிவித்தனர். கலந்துரையாடல் கூட்டத்திற்கு , கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் தலைமை வகித்தார். முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை, முது நிலை கோட்ட ரயில் இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன், முதுநிலை கோட்ட தொலை தொடர்பு பொறியாளர் ராம் பிரசாத், முதுநிலை கோட்ட இயந்திரவியல் பொறியாளர் சதீஷ் சரவணன், முதுநிலை மின் பொறியாளர்கள் ரமேஷ், ரவிக்குமாரன் நாயர், உதவி பாதுகாப்பு ஆணையர் சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Dec 2022 10:07 AM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  2. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  3. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  4. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  5. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  6. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  7. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  8. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  10. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!