Begin typing your search above and press return to search.
மதுரை மாவட்டம், மேலூர் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மரக்கன்று நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் பார்வையிட்டு மரக்கன்று நட்டார்
HIGHLIGHTS
மதுரை மாவட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆய்வு செய்தார்.
மேலூர் ஒன்றியத்துக்குள்பட்ட கீழையூர், தனியாமங்கலம் பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் பார்வையிட்டு மரக்கன்று நட்டார். கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கொரானா வழி முறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்தார். மேலும், ரூ.10.19 லட்சம் செலவில் கட்டப்படும் அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், தாசில்தார் இளமுருகன், மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, உதவி வளர்ச்சி திட்ட அலுவலர் லதா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.