Begin typing your search above and press return to search.
மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரம்: அமைச்சர்கள் தொடக்கம்
அரசு ராஜாஜி மருத்துவமனையில் இயந்திம் மூலம் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணியை அமைச்சர்கள் தொடக்கி வைத்தனர்
HIGHLIGHTS
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இயந்திரங்கள் மூலம் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணியை அமைச்சர்கள் தொடக்கி வைத்தனர்.
மதுகை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். இதில், மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.