/* */

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தற்கொலைக்கு முயன்ற மாற்றுத் திறனாளி

கொடுக்க வாங்கல் பிரச்னைக்காக அளித்த புகாருக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாராம்

HIGHLIGHTS

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தற்கொலைக்கு முயன்ற மாற்றுத் திறனாளி
X

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரை மீட்டி அழைத்துச்சென்ற போலீஸார்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏழு மாதங்களுக்குப் பிறகு மக்கள் குறைதீர் முகாம் இன்று தொடங்கிய நிலையில் வாலிபர் ஒருவர் தற்கொலை முயற்சித்தபோது தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று அவரை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மக்கள் குறை தீர் முகாம் நடைபெற்றது . ஒவ்வொரு திங்கட்கிழமையும், மாவட்ட ஆட்சியாளர் நேரடியாக மனு பெற்று பரிசீலனை செய்து அதற்கான தீர்வு அளிக்கப்பட்டு வந்தது. கொரானா தொற்று காரணமாக கடந்த ஏழு மாதங்களாக பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறப்படவில்லை.

இந்த நிலையில், அக்டோபர் 4 முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர் நேரடியாக மனுக்களை பெறும் நிகழ்வு தொடங்கியது. இந்த நிலையில், மதுரை மாவட்டம், பேரையூர் தாலுக்கா, சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்த ராம்குமார்( 24 )மாற்றுத்திறனாளியான இவர், மதுரை மாவட்ட ஆட்சியாளர் கூடுதல் கட்டடத்தில் உள்ள ஐந்தாவது மாடிக்கு சென்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவாக கூச்சலிட்டாராம். இதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசாரும் அவர் பேசி தீர்த்துக் கொள்ளலாம் உடனடியாக கீழே இறங்கச் சொல்லி சப்தமிட்டனர். ஆனால், அவர் கீழே இறங்க மறுத்துவிட்டார். போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த தல்லாகுளம் மற்றும் மீட்பு குழுவினர் மதுரை மாவட்ட ஆட்சியாளர் கூடுதல் கட்டிடத்தில் உள்ள ஐந்தாவது மாடிக்கு சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், அவர் இறங்க மறுக்கவே சாதுர்யமாக செயல்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் அவரைக் கீழே குதிக்க விடாமல் லாவகமாக பிடித்தனர். முதற்கட்ட விசாரணையில் கொடுக்கல் வாங்கல் பிரச்னைக்காக புகார் கொடுத்தும், காவல்துறை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், உடனடியாக எனக்கு தீர்வு கிடைக்கவேண்டுமெ வலியுறுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மனு நாள் தொடங்கப்பட்ட முதல் நாலே ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 4 Oct 2021 8:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  3. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  4. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  5. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  6. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  8. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்