/* */

மதுரையிலிருந்து வங்கதேசத்திற்கு டிராக்டர்கள் ஏற்றுமதி

மதுரையிலிருந்து வங்கதேசத்திற்கு டிராக்டர்கள் ஏற்றுமதி
X

மதுரையிலிருந்து ரயில் மூலம் வங்கதேசத்திற்கு 25 சரக்கு பெட்டிகளில் 170க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் ஏற்றுமதி செய்து தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டம் சாதனை படைத்துள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே டாஃபே நிறுவனம் விவசாயிகளுக்கு பயன்படும் டிராக்டர்களைத் தயாரித்து வருகிறது. இங்கிருந்து 25 சரக்கு பெட்டிகளில் 170 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் ஏற்றப்பட்டு வங்காளதேசத்தில் உள்ள பேனாபோல் என்ற ரயில் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின் உத்தரவின் பேரில் கோட்ட வர்த்தக மேலாளர் கணேஷ் முதன்முறையாக வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் டிராக்டர்கள் ஏற்றும் பணிகளைத் துவக்கி வைத்தார்.

தென்னக ரயில்வே அளவில் முதல்முறையாக வெளிநாட்டிலுள்ள ரயில் நிலையத்திற்கு இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரையில் தயாரிக்கப்பட்ட டிராக்டர், ரயில் மூலமாக அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Jan 2021 7:28 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?