மதுரையில் பலசரக்கு கடையில் இரவில் தீ விபத்து
மதுரை நகரில் உள்ள பலசரக்கு கடையில் இரவில் தீ விபத்து ஏற்பட்டது.
HIGHLIGHTS
மதுரை மாவட்டம் சோலை அழகுபுரம் ஜானகி இரண்டாவது தெருவில் உள்ள குட்டி மற்றும் அவர் மனைவி ராஜம் என்பவர்கள் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்கள்.
ஊரடங்கு அமலில் உள்ளதால், கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில்,கடையில் இருந்து புகை வந்துள்ளது சிறிது நேரத்தில் தீ மளமளவென எரிய ஆரம்பித்தது. இதைப்பார்த்த, அப்பகுதி பொதுமக்கள் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து தல்லாகுளம் போக்குவரத்து நிலைய அலுவலர் வேல்முருகன் தலைமையிலான மதுரை தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் பலசரக்கு கடையில் எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் 1 மணி நேரம் போராடி அணைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், குளிர் சாதன பெட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தீப் பிடித்ததாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து, ஜெய்ஹிந்த் புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.