/* */

மதுரையில் பலசரக்கு கடையில் இரவில் தீ விபத்து

மதுரை நகரில் உள்ள பலசரக்கு கடையில் இரவில் தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

மதுரையில் பலசரக்கு கடையில் இரவில் தீ விபத்து
X

மதுரை பலசரக்கு கடையில் தீ விபத்து

மதுரை மாவட்டம் சோலை அழகுபுரம் ஜானகி இரண்டாவது தெருவில் உள்ள குட்டி மற்றும் அவர் மனைவி ராஜம் என்பவர்கள் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்கள்.

ஊரடங்கு அமலில் உள்ளதால், கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில்,கடையில் இருந்து புகை வந்துள்ளது சிறிது நேரத்தில் தீ மளமளவென எரிய ஆரம்பித்தது. இதைப்பார்த்த, அப்பகுதி பொதுமக்கள் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து தல்லாகுளம் போக்குவரத்து நிலைய அலுவலர் வேல்முருகன் தலைமையிலான மதுரை தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் பலசரக்கு கடையில் எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் 1 மணி நேரம் போராடி அணைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், குளிர் சாதன பெட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தீப் பிடித்ததாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து, ஜெய்ஹிந்த் புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 6 Jun 2021 10:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  2. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
  3. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  4. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  5. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  6. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  7. குமாரபாளையம்
    மாவட்ட நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
  8. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  9. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  10. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...