/* */

மதுரையில் செயின்பறிப்பு சம்பவம் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மதுரையில் ஆணையர் அலுவலகம் அருகே செயின்பறிப்பு சம்பவம் - பரபரப்பு

HIGHLIGHTS

மதுரையில் செயின்பறிப்பு சம்பவம் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு
X

*மதுரையில் காவல் ஆணையர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பட்டபகலில் நடைபெற்ற மதுரையில்செயின்பறிப்பு சம்பவம் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு*

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ள அழகர்கோவில் ரோடு சாலை பகுதியில் மதுரை மாவட்ட தொழில் மைய அலுவலக வாசல் பகுதியில் நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த இரு பெண்களிடம் தலைக்கவசம் அணிந்துவந்தபடி மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்துசென்றுள்ளார். மேலும் இரு பெண்களும் அதிர்ச்சியில் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் காவல் ஆணையர் அலுவலகம் அருகே நடைபெற்றுள்ள இந்த செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் இளைஞர் செயின் பறிக்கும் போது இரு பெண்களும் தடுமாறி கீழே விழுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.

மதுரை மாவட்டம் முழுவதிலும் காவல்துறை சார்பில் வாகன தணிக்கை நடத்தப்பட்டுவரும் நிலையில் அரசு மற்றும் காவலர்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலயே நடைபெற்ற செயின்பறிப்பு சம்பவம் மதுரை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Updated On: 29 Sep 2021 2:15 PM GMT

Related News