Begin typing your search above and press return to search.
மருத்துவர் சமூக சங்கத்தின் சார்பாக பணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
மதுரை அண்ணாநகர் மருத்துவ சமூக சங்கத்தின் சார்பாக சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கொரோனா மற்றும் ஊரடங்கு கால் பாதிக்கப்பட்ட மருத்துவர் சமூக நிர்வாகிகளுக்கு நிவாரண உதவிகள் சுமார் 100 நபர்களுக்கு அண்ணாநகர் 80 அடி சாலையில் அமைந்துள்ள வீட்டுவசதி வாரிய வணிக வளாகத்தில் வழங்கப்பட்டன
இந்நிகழ்வில் அண்ணாநகர் காவல் துறை ஆய்வாளர் பூமிநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மருத்துவ சமூக சங்கத்தின் நிர்வாகிகளுக்கு கொரோனா நிவாரண உதவிகளான 25 கிலோ அரிசி மற்றும் 1000 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச் செயலாளர் திருமாறன் அவர்கள் தலைமை தாங்கினார் கிளை தலைவர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார் மற்றும் பாரத பிரதமரால் பாராட்டப்பட்ட மோகன் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.