/* */

மதுரை அருகே 10 ஆண்டுகளுக்குப் பின் குடியிருப்புகளுக்கு மின்சார வசதி

நிதி அமைச்சர் நடவடிக்கையால் மின்வசதி இல்லாமல் குடியிருந்த காட்டுநாயக்கர் இனத்தவருக்கு மின்இணைப்பு

HIGHLIGHTS

மதுரை அருகே 10 ஆண்டுகளுக்குப் பின் குடியிருப்புகளுக்கு  மின்சார வசதி
X

மதுரையில் தமிழக நிதியமைச்சர் முயற்சியால் காட்டுநாயக்கர் சமுதாயத்தவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது

மதுரை அருகே கடந்த 10 ஆண்டு காலமாக நிறைவேறாமல் இருந்த காட்டுநாயக்கர் சமுதாயத்தவர் குடியிருப்புகளுக்கான மின் இணைப்பு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜனின் முயற்சியால் தற்போது கிடைத்துள்ளது.

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த, ஜெ.ஜெ.நகரில் 10 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல், குடியிருந்து வந்த காட்டுநாயக்கர் சமுதாயத்தவருக்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நடவடிக்கையால், செவ்வாய்கிழமை மின் இணைப்பு வழங்கப்பட்டது.

நிலையூர் ஒம்சக்தி நகரை அருகே ஜெ.ஜெ. நகர் பகுதியில், 50-க்கும் மேற்பட்ட காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் சுமார் 10 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதி ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது எனக்கூறி வருவாய்துறையினர் பட்டா வழங்காததால், மாநகராட்சியினரும் வீட்டுவரி வசூலிக்கவில்லை. இதனால், இப்பகுதியில் மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இப்பகுதியினர் புதிய அரசு பொறுப்பேற்றவுடன், மாவட்ட ஆட்சியரிடம் மின் இணைப்பு வழங்க கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது குறித்து தகவலறிந்த , நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகருடன் கலந்து ஆலோசித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்களுக்கு மின்இணைப்பு வழங்க உத்தரவிட்டார். அதன் பேரில், கடந்த சில நாள்களாக இப்பகுதியில் மின் இணைப்பு வழங்க பணி நடைபெற்று முதற்கட்டமாக 6 வீடுகளுக்கு செவ்வாய்கிழமை மின் இணைப்பு வழங்கப்பட்டது. மதுரை அரசரடி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ் பாபு, மின் இணைப்பை தொடங்கி வைத்தார். இதையடுத்து, மகிழ்ச்சியடைந்த இப்பகுதி மக்கள் மின்வாரியதுறையினருக்கு சால்வை அணிவித்து, மின் இணைப்பு வழங்கிய தமிழக அரசுக்கும், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர்.

Updated On: 9 Sep 2021 11:18 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்