/* */

மதுரையில் வன உயிரின வார விழா: விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் சைக்கிள் பேரணியில் பங்கேற்று மாணவ, மாணவிகளுடன் 6 கி.மீ தொலைவுக்கு சைக்கிளில் சென்றார்

HIGHLIGHTS

மதுரையில் வன உயிரின வார விழா: விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
X

வனவிலங்கு உயிரின வாரவிழா விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர்

வனஉயிரின வார விழாவையொட்டி மாணவ, மாணவிகளுடன் மதுரை ஆட்சியர் சைக்கிள் பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

உலக வன உயிரின வார விழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை கடை பிடிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்ட வனத்துறை சார்பிலும் பொதுமக்களுக்கு வன உயிரினங்கள், அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இந்நிலையில் வன உயிரின வார விழாவையொட்டி மதுரை மாவட்ட வனத்துறை சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள், இயற்கை ஆர்வலர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தானும் சைக்கிள் பேரணியில் பங்கேற்று சைக்கிள் ஓட்டினார். இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி ரேஸ்கோர்ஸ் சாலையில் தொடங்கி தமுக்கம் மைதானம்,காந்தி அருங்காட்சியகம், ராஜா முத்தையா மன்றம் வரை பேரணியாக சென்றனர். மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் சைக்கிள் பேரணியில் பங்கேற்று மாணவ, மாணவிகளோடு 6கிலோ மீட்டர் தொவைவுக்கு சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியதை பொதுமக்கள் பாராட்டினர்.

பேரணியில் வனங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும், வன உயிரினங்களை வேட்டையாடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.இந்தபேரணியில் மாவட்ட வன அலுவலர் குருசாமி டபாலா, வனத்துறை பாதுகாவலர், மேகமலை காப்பக இயக்குனர் தீபக்தில்ஜி மற்றும் வனத்துறை அதிகாரிகள், காவலர்கள் பங்கேற்றனர்.


Updated On: 3 Oct 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  2. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  3. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  5. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  6. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  9. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  10. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?