/* */

மதுரை நகரில் புதைசாக்கடையில் அடிக்கடி ஏற்படும் அடைப்பால் நீடிக்கும் அவலநிலை

மதுரை நகரில் புதைசாக்கடையில் அடிக்கடி ஏற்படும் அடைப்பால் நீடிக்கும் அவலநிலை சரியாகுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

HIGHLIGHTS

மதுரை நகரில் புதைசாக்கடையில் அடிக்கடி ஏற்படும் அடைப்பால் நீடிக்கும் அவலநிலை
X

, மதுரை மாநகராட்சி 30-வது வார்டில் ,சௌபாக்கி விநாயக கோவில் தெரு, வீரவாஞ்சி தெரு ஜூப்பிலி டவுன் குருநாதன் தெரு ஆகிய தெருக்களில், பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவு நேரானது சாலையில் ஆறு போல ஓடுகிறது

அடிக்கடி ஏற்படும் புதை சாக்கடை அடைப்புக்கு: மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வுகாண வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட காமராசபுரம், பாலரங்கபுரம், கீழ் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.நெருக்கடி மிகுந்த பகுதிகளில், வீடுகள் அதிகம் இருப்பதனால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் புதைசாக்கடை மூலம் நிரம்பி அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் ஆறாக ஓடுகிறது. இதனால் ,துர்நாற்றம் வீசுவதோடு கொரானா மலேரியா டெங்கு உள்ளிட்ட நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது.

இதுகுறித்து, சம்பந்தபட்ட மாநகராட்சி மற்றும் தெற்கு மண்டல அதிகாரிகளிடம் முறையிடும் போது, அவ்வப்போது மட்டுமே கழிவு நீர் அப்புறபடுத்தும் வாகனம் மூலம் தற்காலிகமாக தீர்வு செய்து வருகின்றனர்.மீண்டும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதிவாசிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் ,மீண்டும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.எனவே, புதை சாக்கடை அடைப்பு ஏற்படாமல் இருக்க பாதாள சாக்கடைகளை புனரமைக்கவோ அல்லது ஆழப்படுத்தி அமைக்கவும் கூடுதல் புதை சாக்கடைகளை அமைத்து நிரந்தர தீர்வுகாண வேண்டும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

மதுரை மேலமடை, தாசிலா நகர், கோமதிபுரம் பகுதிகளில் சாக்கடைகள் சரிவர அமைக்கப்படாததால்,மழைக் காலங்களில் கழிவு நீரானது சாலை நடுவே பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், மதுரை மாநகராட்சி 30-வது வார்டில் ,சௌபாக்கி விநாயக கோவில் தெரு, வீரவாஞ்சி தெரு ஜூப்பிலி டவுன் குருநாதன் தெரு ஆகிய தெருக்களில், புதை சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவு நேரானது சாலையில் ஆறு போல ஓடுகிறது. இதை ,மதுரை மாநகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து புதைசாக்கடை சீரமைப்பு பணிகளை உடனே துவக்கிட இப்பகுதி குடியிருப்போர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Updated On: 9 July 2022 8:30 AM GMT

Related News