/* */

மதுரை மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி: காவலர் சஸ்பெண்ட்.

மதுரை மத்தியசிறை கைதியை தற்கொலை முயற்சித்த சம்பவத்தில் சிறை காவலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை நடவடிக்கை எடுத்தது

HIGHLIGHTS

மதுரை மத்திய சிறையில் கைதி தற்கொலை  முயற்சி: காவலர் சஸ்பெண்ட்.
X

பைல் படம்

சிறை கைதியை தற்கொலைக்கு தூண்டியதாக சிறை காவலரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மத்திய சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது .

மதுரை மத்திய சிறையில் இருந்த முகமது உசேன் என்பவர் கடந்த மே 27 ஆம் தேதி சிறை அறையை மாற்றியதை கண்டித்து பிளேடால் தன்னை தானே அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .காயமடைந்த அவர் , மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . விசாரணையில் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த சின்னச்சாமி என்ற சிறைக் காவலர் பிளேடை கொடுத்து அறுத்துக் கொள்ள கூறியதாக விசாரணைக் கைதி வாக்குமூலம் கொடுத்தார் .

எனவே சிறைவாசியை தற்கொலை செய்துள்ள பிளேடு கொடுத்து உதவிய சிறை காவலர் சின்னசாமியை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து மதுரை மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த் கண்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார் .மேலும் இதுபோல் சிறை கைதிகளுக்கு சாதகமாக செயல்படும் சிறை காவலர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Updated On: 2 Jun 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?