/* */

ஹிந்தி மொழியை தேசிய மொழியாக ஏற்க போவதில்லை -இயக்குனர் பா.ரஞ்சித்

இயக்குனர் பா.ரஞ்சித் ஹிந்தியை ஒருபோதும் தேசிய மொழியாக நாம் ஏற்க போவதில்லை!

HIGHLIGHTS

ஹிந்தி மொழியை தேசிய மொழியாக ஏற்க போவதில்லை -இயக்குனர் பா.ரஞ்சித்
X

"வட இந்தியர்கள் தென்னிந்தியர்களைவிட மேலானவர்கள் என்றும், பல மாநிலங்களில் இந்தி பேசப்படுவதால், அது தேசிய மொழியென்றும் கருதப்படுகிறது.ஆனால், அதனை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்" என்று இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

மதுரையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில், வேர்ச்சொல் எனும் தலித் இலக்கியவாதிகளுக்கான 2 நாள் கூடுகை நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலித் எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கின்றனர். மதுரை உலகதமிழ்ச் சங்கத்தில் இந்த விழா நடைபெற்று வருகிறது. முன்னதாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தி தேசிய மொழி என்பது தொடர்பான நடிகர்களின் கருத்து மோதல் குறித்த கேள்விக்கு, "இந்திய அளவில் இந்தி மொழி ஆதிக்கம் அதிகமாக இருப்பதனால் அவ்வாறு நினைக்கின்றனர்.

வட இந்தியா, தென் இந்தியாவைவிடவும். வட இந்தியர்கள் தென்னிந்தியர்களைவிடவும் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. அதேபோல் இந்தி மொழி, பல மாநிலங்கள் சேர்ந்து பேசக்கூடிய ஒரு மொழியாக இருப்பதாலும் அது மேன்மையானது என்று யோசிக்கலாம். ஆனால் அதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லையே. தொடர்ந்து நாம் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். நாம் அதனை ஒருபோதும் தேசிய மொழியாக ஏற்கப்போவதில்லை. எனக்கான இணைப்பு மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி இருப்பது தவறில்லை. இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் அவசியம் என்று நான் கருதுகிறேன். திராவிடர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிற்பது முக்கியமனது என்றும் நான் நினைக்கிறேன்" என்று பதிலளித்தார்.

Updated On: 30 April 2022 5:41 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...