/* */

பல மாவட்டங்களில் கொள்ளையடித்த முக்கிய கொள்ளையர்கள் சிக்கினர்

கொள்ளையடிக்கப்பட்ட 77 சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனம் கார் பறிமுதல். 2 கொள்ளையர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

பல மாவட்டங்களில் கொள்ளையடித்த முக்கிய கொள்ளையர்கள் சிக்கினர்
X



மதுரை மாவட்டத்தில் தாக்கல் ஆகும் பாரி குற்ற வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அந்த வகையில் சமீபத்தில் ஒத்தக்கடை மற்றும் கருப்பாயூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரண்டு வீடுகளை உடைத்து சுமார் 77 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இது சம்பந்தமாக கொள்ளை வழக்கில் ஈடுபட்ட எதிரிகளை உடனடியாக கைது செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் சார்பு ஆய்வாளர் ஆனந்த் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விரைந்து புலன் விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளி தமிழ்குமரன் ஆகியோர்களை கைதுசெய்து, அவர்களும் இருந்து மேற்படி வழக்கில் காணாமல் போன 77 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 இரண்டு சக்கர வாகனம் மற்றும் 1 நான்கு சக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

மேற்படி எதிரிகள் இவ்வழக்கில் மட்டுமல்லாது அன்றைய தினத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் மணிகண்டன்என்பவருக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

இவ்வழக்கில் விரைந்து புலன் விசாரணை மேற்கொண்டு எதிரிகளை கைது செய்த தனிப்படையினர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் வெகுவாக பாராட்டினார். இதேபோல் மதுரை மாவட்டத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 16 May 2022 5:23 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்