/* */

மருதுபாண்டியர் சகோதரர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் மரியாதை

மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

HIGHLIGHTS

மருதுபாண்டியர் சகோதரர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் மரியாதை
X

மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ 

மருது சகோதரர்களின் 222 வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை ரயில் நிலையம் அருகே இருக்கக்கூடிய ஸ்காட் ரோடு பகுதியில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சுதந்திரத்திற்காக வெள்ளையனை எதிர்த்து போரிட்ட மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவர்களது நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளோம். முன்னதாக, மதுரையில் இருக்கக்கூடிய அவர்களது சிலைக்கு தற்போது மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளோம்.

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று சொன்ன பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுடைய நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் மதுரைக்கு வந்து மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக பசும்பொன் செல்ல உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, மதுரை வீரகனூர் சுற்றுச்சாலை பகுதியில், பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளோம் என்று கூறினார்

அதிமுக காலகட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு அணிவிக்கக்கூடிய தங்க கவசத்தை நீதி அரசர்கள் தீர்ப்பின்படி இந்த ஆண்டு அதிமுகவின் பொருளாளர் முறைப்படி பெற்று அதன் வாரிசுதாரர்களிடம் ஒப்படைப்பார்.

ஒவ்வொரு ஆண்டும் மதுரை அண்ணா நகர் பகுதியில் இருக்கக்கூடிய வங்கியில் இருந்து பெற்று வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில், இந்த ஆண்டும் அதேபோன்று நடைபெறும் என்றார்.

Updated On: 24 Oct 2023 3:48 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  2. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  3. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  7. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  8. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  9. காஞ்சிபுரம்
    மூன்றே மாதம்தான் பயணியர் நிழற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது...!
  10. வீடியோ
    அரசியலை தொழிலாக செய்யும் அரசியல்வாதிகள் !போதை பொருள் தொழிலா? #public...