/* */

மதுரையில் தீபாவளிச்சீட்டு மோசடி; தம்பதி தலைமறைவு

மதுரை மாவட்டம், பரவையில் தீபாவளி சீட்டு நடத்தி 600க்கும் மேற்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்த, தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

மதுரையில் தீபாவளிச்சீட்டு  மோசடி; தம்பதி தலைமறைவு
X

மதுரையில் பணமோசடி செய்த தம்பதி தலைமறைவு

மதுரை மாவட்டத்தில், தீபாவளி சீட்டு பணம் பிடிப்பதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவான போலீஸ் எஸ்.ஐ மற்றும் அவரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். பரவை பேரூராட்சியைச் சேர்ந்தவர் மோகன்குமார். மதுரை குற்றப்பிரிவு போலீசில் எஸ்.ஐ., ஆக பணிபுரிகிறார் . இவரது மனைவி கஸ்தூரி, தீபாவளி சீட்டு பணம் பிடிப்பதாக கூறி அப்பகுதியை சேர்ந்த 600 பெண்களிடம், தலா ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி பணத்தை திருப்பித் தராமல், இழுத்தடித்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனையடுத்து, மோகன்குமார் - கஸ்தூரி தம்பதி வீட்டை பூட்டிவிட்டு, பணத்துடன் மாயமாகி விட்டனர் . இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 1 Oct 2022 3:38 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?