/* */

மதுரை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு மையம்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

TN Health Minister -மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தினந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம்

HIGHLIGHTS

மதுரை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு மையம்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
X

மதுரை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பாக விமான நிலைய வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்து பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் .

TN Health Minister -மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் சுகாதாரத்துறை சார்பில் அரசு நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார்.

தொடர்ந்து , மதுரை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பாக விமான நிலைய வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கூறியதாது: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் 200 ஏக்கர் பரப்பளவில் முலிகை மருந்து தயாரிக்க அஸ்வகந்தா சாகுபடி திட்டம் துவக்கப்படுகிறது.சாகுபடி செய்யும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு மாநில மூலிகை தாவர வாரியம் என்று மத்திய விவசாய ஆராய்ச்சி நிலைய உதவியின் கீழ் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டடங்கள் என ஏழு கட்டடங்கள் திறந்து வைக்க இருக்கிறோம். மழைக்காலம் வருவதை விட்டு நோய் தடுப்பு நடவடிக்கை குறித்த கேள்விக்கு, இது சம்பந்தமாக ஏற்கெனவே ஒரு கூட்டம் சென்னையில் நடைபெற்றது .அந்த வகையில், உள்ளாட்சி அமைப்புகள் மக்களிடையே ஒவ்வொரு வீடுகளிலும் தேங்கி நிற்கும் மழை நீர் வெளியேற்றுவதற்கான சூழலை உள்ளாட்சி நிர்வாகம் ஏற்றுள்ளது.

தொடர்ச்சியாக, மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தினந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம். ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த முகாமில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல் லாமல் ,389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் பள்ளியில் உள்ள மாணவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு காய்ச்சல் கண்காணிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

அந்த வகையில், ஹெச் ஒன் என்கிற வைரஸ் காய்ச்சல் நாள்தோறும் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கான பாதிப்பு இருந்தது தற்போது 30க்கும் கீழாக குறைந்திருக்கிறது. நேற்று 24 மணி நேரத்தில் 24 பேருக்கும் மட்டுமே இந்த பாதிப்பு ஏற்பட்டுள் ளது. டெங்குவாக இருந்தாலும் கட்டுப்பட்டு உள்ளது.

நயன்தாரா-விக்னேஷ்சிவன் வாடகை தாய் குழந்தை விவகாரம் குறித்த கேள்விக்கு இந்த விவகாரம் குறித்து சுகாதாரத் துறை சார்பில் விளக்கம் கேட்டுள்ளது. தசைநார் சிதைவு நோயால் 3000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்தால், உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இதில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் அர்ஜுன் குமார், மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலு, மாவாட்ட திட்ட அலுவலர் ராஜேந்திரன் , ஷாடி தொண்டுநிறுவனம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.வட்டார மருத்துவர் வட்டாரா மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 13 Oct 2022 10:55 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  3. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  5. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  8. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?
  10. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்