/* */

மதுரையில் வங்கியில் திடீர் தீ விபத்து: விரைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்ப்பு

மதுரையில் தனியார் வங்கியில் நேரிட்ட திடீர் தீவிபத்து உரிய நேரத்தில் தடுக்கப்பட்டதால் பெரும் சேதம் தடுக்கப்பட்டது

HIGHLIGHTS

மதுரையில் வங்கியில் திடீர் தீ விபத்து: விரைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்ப்பு
X

மதுரையில் உள்ள தனியார் வங்கியில் நேரிட்ட திடீர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்

வங்கியில் திடீர் தீ விபத்து துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மதுரை ஆரப்பாளையம், ஞானஒளிபுரம் பகுதியில் கரூர் வைஸ்யா வங்கி செயல்பட்டு வருகிறது. இதில், தரைதளத்தில் வங்கியும் முதல் தளத்தில் மண்டல அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மண்டல அலுவலகத்தில்,உள்ள குளிர்சாதன பெட்டியில் புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக, வங்கி ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து குறித்து தகவலறிந்த மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு உள்ளே சென்று தீயை அணைத்தனர்.

இந்த தீவிபத்தில் ஏசி சேர்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமானது. துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால், வங்கியில் உள்ள மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. நல்வாய்ப்பாக ஊழியர்கள் அனைவரும் வெளியேறியதால் யாருக்கும் பாதிக்கப்படவில்லை. இச்சம்பவம் குறித்து, கரிமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

Updated On: 17 April 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்