Begin typing your search above and press return to search.
மதுரை கோயில்களில் நாளை தேய்பிறை அஷ்டமி பூஜை
மதுரை கோயில்களில் தேய்பிறை அஷ்டமி விழாவானது (அக். 28.) வியாழக்கிழமை மாலை நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமியன்று பக்தர்கள் கோயிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும் வடைமாலை அணிவித்தும், வழிபடுவது வழக்கம். இதேபோல், சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர், மதுரை தெப்பக்குளம் கால பைரவர், மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயம், தாசில்தார் நகர் வரசித்தி விநாயகர், ஆவின் பால விநாயகர் ஆலயங்களில், கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக, அர்ச்சணை வழிபாடுகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.